கோவை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

கோவை மாவட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், ஆனைமலை, அன்னூர் ஆகிய பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து உப்பிலிப்பாளையம் சிக்னல் வரை வரிசையாக நின்று பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை முன் வைத்தனர்.



இந்த மனித சங்கிலி போராட்டத்தில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும், முடக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் நியமான முறைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஜெகநாதன், பாலசுப்பிரமணியன், ஆனந்த், அரசு, கலைவாணன், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...