பல்லடத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மழையில் நனைந்தப்படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மழையில் நனைந்தப்படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மழையில் நனைந்தப்படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும், சிறப்பு காலம் வரை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரியும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த கோரியும், தமிழகம் முழுவதும் சுமார் 20,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கைகளை கோர்த்தபடி சாலையோரமாக மழையில் நனைந்தபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கொசவம்பாளையம் சாலை வரை கையில் பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...