பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக பலி

பல்லடம் அருகேயுள்ள சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் கட்டியிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.


திருப்பூர்: பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி மேய்ச்சலுக்குக் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக பலியானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர், விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் கட்டியுள்ளார்.



மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் மீது இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.



ஆசையாக வளர்த்த மாடு மின்னல் தாக்கி உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த பசுமாடு அவரது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...