பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக பலி

பல்லடம் அருகேயுள்ள சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் கட்டியிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.


திருப்பூர்: பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி மேய்ச்சலுக்குக் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக பலியானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர், விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் கட்டியுள்ளார்.



மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் மீது இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.



ஆசையாக வளர்த்த மாடு மின்னல் தாக்கி உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த பசுமாடு அவரது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...