பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் எதிரொலி - கோவை நீதிமன்றத்தில் கடும் கட்டுப்பாடு!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே போலீசாரால் அனுமதிக்கப்படுகின்றனர்.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று கணவன் மனைவி விவகாரத்தில் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பைப ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவா - கவிதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

இந்நிலையில் கணவன் சிவா ஒரு லிட்டர் அளவிலான ஆசிட்டை நீதிமன்றத்திற்குள் புகுந்து மனைவி கவிதா மீது ஊற்றினார். இதில், பாதிக்கப்பட்ட கவிதா 85 சதவீதம் அளவிலான காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஆசிட் ஊற்றியவுடன் தப்பிக்க முயன்ற சிவாவை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தர்ம அடிகொடுத்து பிடித்தனர்.



இச்சம்பவத்தின் எதிரொலியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



அதே சமயம் நீதிமன்றத்திற்குள் வரும் நபர்களின் பை மற்றும் அவர்களை சோதனையிட்ட பிறகு நீதிமன்றத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.



மேலும் பொதுமக்களின் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.



ஏனைய நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவ்வழியாக வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கோவைவ போலீசாரின் நடவடிக்கைக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...