பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் எதிரொலி - கோவை நீதிமன்றத்தில் கடும் கட்டுப்பாடு!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே போலீசாரால் அனுமதிக்கப்படுகின்றனர்.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று கணவன் மனைவி விவகாரத்தில் மனைவி மீது கணவன் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பைப ஏற்படுத்தியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவா - கவிதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

இந்நிலையில் கணவன் சிவா ஒரு லிட்டர் அளவிலான ஆசிட்டை நீதிமன்றத்திற்குள் புகுந்து மனைவி கவிதா மீது ஊற்றினார். இதில், பாதிக்கப்பட்ட கவிதா 85 சதவீதம் அளவிலான காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஆசிட் ஊற்றியவுடன் தப்பிக்க முயன்ற சிவாவை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தர்ம அடிகொடுத்து பிடித்தனர்.



இச்சம்பவத்தின் எதிரொலியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



அதே சமயம் நீதிமன்றத்திற்குள் வரும் நபர்களின் பை மற்றும் அவர்களை சோதனையிட்ட பிறகு நீதிமன்றத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.



மேலும் பொதுமக்களின் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.



ஏனைய நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவ்வழியாக வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கோவைவ போலீசாரின் நடவடிக்கைக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...