திருப்பூர் ரேஷன் கடையில் 2 மற்றும் 5 கிலோ சிலிண்டர் விநியோகம் இன்று முதல் துவக்கம்!

திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இன்று முதல் 2 மற்றும் 5 கிலோ அளவிலான சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான வரவேற்பை தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அரண்மனைபுதூர் அருகேயுள்ள ரேஷன் கடையில் இன்று முதல் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கேஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனிடையே திருப்பூர், சென்னை, கோவை போன்ற இடங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர்.

அதேபோல் வெளி மாநில தொழிலாளர்கள் தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு ஒன்று என்ற நியாய விலை கடையில் இந்த திட்டமானது இன்று துவங்கப்பட்டது.



இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில், இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.



வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம்.

தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இந்த திட்டமானது இந்த கடையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் வரவேற்பை பொறுத்து விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் கூறப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...