திருப்பூர் ரேஷன் கடையில் 2 மற்றும் 5 கிலோ சிலிண்டர் விநியோகம் இன்று முதல் துவக்கம்!

திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இன்று முதல் 2 மற்றும் 5 கிலோ அளவிலான சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான வரவேற்பை தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அரண்மனைபுதூர் அருகேயுள்ள ரேஷன் கடையில் இன்று முதல் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ சிலிண்டர் விநியோகம் திட்டம் துவங்கப்பட்டது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கேஸ் ஏஜென்சிகளில் ஆதார் எண் முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனிடையே திருப்பூர், சென்னை, கோவை போன்ற இடங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர்.

அதேபோல் வெளி மாநில தொழிலாளர்கள் தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு ஒன்று என்ற நியாய விலை கடையில் இந்த திட்டமானது இன்று துவங்கப்பட்டது.



இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில், இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.



வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம்.

தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இந்த திட்டமானது இந்த கடையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் வரவேற்பை பொறுத்து விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...