ஆசிட் வீச்சு விவகாரம்: ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் - மாதர் சங்கம் வலியுறுத்தல்!

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி, வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: கோவையில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி தெரிவித்துள்ளார்.



கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவரே இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிதாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுகந்தி இன்று மாலை சங்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் சுகந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு காதலிக்க மறுத்ததால், காதலித்து விட்டு கைவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இன்று மனைவியின் மீதே கணவர் ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேசினோம். தமிழகத்தில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது.

ஆனால் நீதிமன்றத்திற்கு உள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்.

நீதிமன்றத்திற்கு விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு வரும் பெண்கள் அதிகம். பெண்கள் நீதிமன்றம் போகும் போது பாதுகாப்பற்ற நிகழ்வு நடந்தால் பெண்கள் எங்கு சென்று தங்கள் பிரச்சினைகளை வைக்க முடியும்?.

இந்தியாவில் குடும்ப வன்முறை நடப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது போன்ற வன்முறைகளை குறைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள் பாதுகாப்பான வளாகங்களாக இருக்க வேண்டும்.

அமிலங்கள் எங்கு விற்கப்படுகிறது? இவர் யாரிடம் அமிலம் வாங்கினார்கள்? என்பதும் பார்க்கப்பட வேண்டும். அமிலத்தை விநியோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...