கோவையில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி மீது பாஜகவின் அடக்கு முறையை கண்டித்து கோவை, தொண்டாமுத்தூர், ஆர்.எஸ்.புரம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தொண்டாமுத்தூர், ஆர் எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி மீது பாஜகவின் அடக்கு முறையை கண்டித்து தொண்டாமுத்தூர், ஆர் எஸ் புரம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி, ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி மீது திட்டமிட்டு பாஜக கட்சி அரசு மிரட்டுகின்ற பாணியை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கின்றது. மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, மற்றும் அரசு நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு மிரட்டல்களை நிறைவேற்றி வருகிறது.

பாஜக தன்னுடைய பொருளாதாரத் தோல்வி, அரசு நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காக திசை திருப்பதற்காகவும் அதானி மீதும், பிரதமர் மீதும், எழுந்த குற்றச்சாட்டை மறைத்து மக்களுடைய கவனத்தை திசை திருப்பும் விதமாக இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.

உண்மையை, நேர்மையை, பேசுகின்ற ஒரே தலைவராக இன்றைக்கு ராகுல் காந்தி தேசத்தில் வலம் வருகிறார். அவரை கட்டுப்படுத்தி விட்டால் அல்லது மிரட்டி முடக்கி விட்டால், வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவோடு பாஜக சர்வாதிகார போக்கோடு செயல்படுகிறது.

சர்வாதிகாரத்தையும் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.



கூடவே பிரதமர் மோடி படத்தை தீயிட்டு எரித்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...