கோவையில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி மீது பாஜகவின் அடக்கு முறையை கண்டித்து கோவை, தொண்டாமுத்தூர், ஆர்.எஸ்.புரம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தொண்டாமுத்தூர், ஆர் எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி மீது பாஜகவின் அடக்கு முறையை கண்டித்து தொண்டாமுத்தூர், ஆர் எஸ் புரம், காரமடை, கூடலூர், கருமத்தம்பட்டி, ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி மீது திட்டமிட்டு பாஜக கட்சி அரசு மிரட்டுகின்ற பாணியை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கின்றது. மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, மற்றும் அரசு நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு மிரட்டல்களை நிறைவேற்றி வருகிறது.

பாஜக தன்னுடைய பொருளாதாரத் தோல்வி, அரசு நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காக திசை திருப்பதற்காகவும் அதானி மீதும், பிரதமர் மீதும், எழுந்த குற்றச்சாட்டை மறைத்து மக்களுடைய கவனத்தை திசை திருப்பும் விதமாக இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.

உண்மையை, நேர்மையை, பேசுகின்ற ஒரே தலைவராக இன்றைக்கு ராகுல் காந்தி தேசத்தில் வலம் வருகிறார். அவரை கட்டுப்படுத்தி விட்டால் அல்லது மிரட்டி முடக்கி விட்டால், வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவோடு பாஜக சர்வாதிகார போக்கோடு செயல்படுகிறது.

சர்வாதிகாரத்தையும் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.



கூடவே பிரதமர் மோடி படத்தை தீயிட்டு எரித்தினர்.

Newsletter

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...