உடுமலையில் சரக்கு வேன் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த அன்பழகன் (40), வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் பூலாங்கிணறு பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் பலியானார்.


திருப்பூர்: பூலாங்கிணறு பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (40). விவசாயியான இவர் சொந்த வேலை காரணமாக உடுமலைக்கு வந்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.



பூலாங்கிணறு பகுதியில் வந்த போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேனின் மீது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...