பல்லடம் அருகே சடலமாக இளம்பெண் மீட்பு - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் தர்ஷினி என்ற பெண்(17) நேற்றிரவு தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வரதட்சணை கொடுமை செய்து தர்ஷினியை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



கோவை: பல்லடம் அருகே மஞ்சநாயக்கனூர் கிராமத்தில், தூக்கில் தொங்கியப்பட்டி இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அறிவொளி நகரில் வசித்து வரும் ராஜ் மற்றும் சவுதாமணி ஆகியோரின் மகள் தர்ஷினி. தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் சௌதாமணி மது போதைக்கு அடிமையானதால் தர்ஷினி தனது தாய் மாமன் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.



11ஆம் வகுப்பு படித்து வந்த தர்ஷனியை, 16 வயதிலேயே அவரது தாய் கட்டாயப்படுத்தி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே பல்லடம் அருகே மஞ்சப்பூரை சேர்ந்த குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், குமார் வீட்டார் தர்ஷினியை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 6 மணியளவில் தர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய்க்கு தர்ஷினியின் கணவர் குமார் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

குமார் வீட்டாரே போலீசாருக்கு தகவல் அளிக்காமல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தர்ஷினியின் உடலை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.



தகவலறிந்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வந்த தர்ஷனியின் குடும்பத்தினர், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி தங்களது மகளை கொன்று விட்டதாக புகார் தெரிவித்தனர்.



சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தர்ஷினியின் குடும்பத்தாரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். பிரேத பரிசோதனை முடிந்த பின்பு தர்ஷனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தர்ஷினியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் தெரிவித்துள்ள நிலையில் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...