கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்த பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்.பி!

கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய சிவாவை துரத்தி பிடித்த பெண் காவலர் இந்துமதியை, மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் நேரில் அழைத்து பாராட்டி, ரூ.5,000 வெகுமதி வழங்கியுள்ளார்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிய நபரை துரத்தி பிடித்து கைது செய்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது முதல் கணவரான சிவா ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பிச் சென்றார்.

இந்நிலையில், சிவா நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி வெளியே ஓடியபோது அங்கு வேறு வழக்கு விசாரணைக்காக வந்த ஆனைமலை பெண் காவலர் இந்துமதி, சிவாவை துரத்திச் சென்று பிடித்து கைது செய்தார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட சிவாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தைரியமாக குற்றவாளியை துரத்திச் சென்று பிடித்த பெண் காவலரை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் அழைத்து பாராட்டி ரூ.5,000 வெகுமதி அளித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...