கோவை தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக.! - கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சி முழுவதும்‌ நாளை முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்வதாக தூய்மை பணியாளர்கள்‌ அறிவித்துள்ள நிலையில்‌, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 26ஆவது மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகராட்சி ஆணையருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி முழுவதும்‌ நாளை முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்வதாக தூய்மை பணியாளர்கள்‌ அறிவித்துள்ள நிலையில்‌ தற்போது தமிழக முதல்வர்‌ வரலாறு காணாத வகையில்‌, ரூ.9,000 கோடியில்‌ மெட்ரோ ரயில்‌ திட்டம்‌, தாவரவியல்‌ பூங்கா மற்றும்‌ தகுதியுள்ள மகளிருக்கு மாதம்‌ தோறும்‌ உதவித்‌தொகை ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய வளர்ச்சிப்‌ பணிகளை கோயமுத்தூருக்கு வழங்கி உள்ளார்.

இந்நிலையில்‌ தற்பொழுது சட்டமன்ற கூட்டத்தொடர்‌ நடைபெற்று வரும்‌ சூழ்நிலையில்‌ அனைத்து வார்டுகளிலும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ பற்றாக்குறை, தூய்மைப்பணிகளில்‌ தொய்வு உள்ளிட்ட சூழ்நிலைகள்‌ தான்‌ நிலவுகிறது.

இதையும்‌ தாண்டி தற்பொழுது நாளை முதல்‌ தூய்மை பணியாளர்கள்‌ கால வரையற்ற வேலை நிறுத்தம்‌ செய்ய இருப்பதால்‌ மிகப்‌ பெரிய அளவில்‌ சுகாதார சீர்கேடு ஏற்படும்‌ அபாயம்‌ உள்ளது.

ஆகவே இதை தடுக்கும்‌ வகையிலும்‌ அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும்‌ வகையிலும்‌ உடனடியாக அனைவரையும்‌ அழைத்துப்‌ பேசி தூய்மை பணியாளர்களின்‌ நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...