கோவை இடையர்பாளையத்தில் சிக்னல் பழுது : தாறுமாறாக ஓடும் வாகனங்கள்!

கோவை இடையர்பாளையத்தில் சிக்னல் இயங்காததால், வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையத்தில் சிக்னல் இயங்காததால், வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் கோவை-தடாகம் சாலையும் ஒன்றாகும். காந்தி பார்க், பால் கம்பெனி, ஜி.சி.டி, வெங்கடாபுரம், வேலண்டி பாளையம், கோவில்மேடு, இடை யார்பாளையம், சிவாஜி காலனி, டி.வி.எஸ் நகர், கணுவாய், ஆனைகட்டி பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுவாகும்.

இந்த சாலையின் மையப்பகுதி இடையர்பாளையம் பிரிவாகும். இடையர்பாளையம் பிரிவில் உள்ள 4 ரோடு சந்திப்பில் ஒருபுறம் கவுண்டம்பாளையத்திற்கும், ஒருபுறம் வடவள்ளிக்கும், ஒருபுறம் கணுவாய்க்கும், ஒருபுறம் காந்தி பார்க்குக்கும் செல்லக்கூடிய சாலையாகும்.

இந்த நான்கு ரோடு சந்திப்பில் எந்நேரமும் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்று கொண்டிருக்கும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வரிசையாக சென்றது. ஆனால் தற்போது பல மாதங்களாக இந்த சிக்னல் செயல்படவில்லை. இதனால் வாகனங்கள் அனைத்தும் அத்துமீறி செல்லும் அவல் நிலை உள்ளது.

இது குறித்து மக்கள் கூறியதாவது:

சராசரியாக ஒரு நாளைக்கு இந்த இடையர்பாளையம் பகுதி சிக்னலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. சிக்னல் இயங்கி கொண்டிருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது சிக்னல் இயங்கப்படவில்லை. போக்குவரத்து போலீசாரும் நிற்பதில்லை.

இதனால் வாகனங்கள் அனைத்தும் தாறுமாறாக செல்லும் சூழ்நிலை உள்ளது.

4 சக்கர வாகனங்கள் வருவதற்கு முன்கூட்டியே இரு சக்கர வாகனங்கள் குறுக்கே புகுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் தாய்மார்கள் அவ்வப்போது கீழே விழுந்து எழும் சூழ்நிலையும் காணப்படுகிறது. மேலும் தடாகம் சாலையானது செங்கல் லாரிகள் அதிகம் பயணிக்கும் சாலையாக உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் இதனை கருத்தில் கெண்டு இந்த சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் போக்குவரத்து போலீசார் இந்த இடத்தில் நின்று போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் விபத்துகளை சந்திக்க நேரிடும். எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...