உடுமலை பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை பணி தீவிரம்

உடுமலை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



திருப்பூர்: உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை இன்று முதல் தொடங்கி வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி வரை ராஜேந்திர ரோட்டில் உள்ள மாட்டுத் தொழுவம் பகுதியில் நடைபெற உள்ளது.



மேலும் உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தினமும் தோராயமாக 75நாய்கள் பிடிக்கப்படுகிறது. நாய்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ராஜேஸ்வரி கவுசலோ டிரஸ்ட் திருநெல்வேலி' என்ற அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.



இம்முகாமில் தெரு நாய்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் கருத்தடை செய்ய விரும்பினால் நகராட்சியை அணுகி தங்களது செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை செய்து கொள்ளலாம் என நகரமன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையர் சத்தியநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...