உடுமலை பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை பணி தீவிரம்

உடுமலை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



திருப்பூர்: உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை இன்று முதல் தொடங்கி வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி வரை ராஜேந்திர ரோட்டில் உள்ள மாட்டுத் தொழுவம் பகுதியில் நடைபெற உள்ளது.



மேலும் உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தினமும் தோராயமாக 75நாய்கள் பிடிக்கப்படுகிறது. நாய்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ராஜேஸ்வரி கவுசலோ டிரஸ்ட் திருநெல்வேலி' என்ற அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.



இம்முகாமில் தெரு நாய்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் கருத்தடை செய்ய விரும்பினால் நகராட்சியை அணுகி தங்களது செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை செய்து கொள்ளலாம் என நகரமன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையர் சத்தியநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...