உடுமலை பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை பணி தீவிரம்

உடுமலை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



திருப்பூர்: உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை இன்று முதல் தொடங்கி வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி வரை ராஜேந்திர ரோட்டில் உள்ள மாட்டுத் தொழுவம் பகுதியில் நடைபெற உள்ளது.



மேலும் உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தினமும் தோராயமாக 75நாய்கள் பிடிக்கப்படுகிறது. நாய்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ராஜேஸ்வரி கவுசலோ டிரஸ்ட் திருநெல்வேலி' என்ற அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.



இம்முகாமில் தெரு நாய்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் கருத்தடை செய்ய விரும்பினால் நகராட்சியை அணுகி தங்களது செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை செய்து கொள்ளலாம் என நகரமன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையர் சத்தியநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...