கோவையில் ரவுடிக்கு சரமாரி கத்திக்குத்து - தலைமறைவான மற்றொரு ரவுடிக்கு போலீஸ் வலை

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் மதுபோதையில் ரவுடி வேலு என்பவரை, சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மற்றொரு பிரபல ரவுடி தக்காளி மாதவன் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியை சேர்ந்த வேலு எனும் வேலுசாமி என்ற ரவுடி மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதேபோல் மற்றொரு பிரபல ரவுடியான கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தக்காளி மாதவன் என்பவர் மீது சுமார் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறவே ரவுடி வேலு உயிருக்கு பயந்து ஓடியுள்ளான்.



அப்போது வேலாண்டிபாளையம் அடுத்த கொண்டசாமி நாயுடு வீதி பகுதியில் ஓடிய வேலுவை சுற்றி வளைத்த தக்காளி மாதவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாய்பாபாகாலணி காவல்நிலைய போலீசார், குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிய வேலுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தப்பியோடிய பிரபல ரவுடி மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...