உடுமலையில் திமுக நகர்மன்றத் தலைவரை பாராட்டி பேனர் வைத்த அதிமுகவினர்! - வைரலாகும் வீடியோ

உடுமலை நகராட்சியில் திமுக நகர மன்ற தலைவராக இருக்கும் மத்தீன், 32வது வார்டில் பல லட்சம் மதிப்பில் தரைமட்ட பாலம் அமைத்து கொடுத்தற்காக நன்றி கூறி பாராட்டி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நகரமன்றத் தேர்தலில் 18 வார்டுகளை திமுக கைப்பற்றிய நிலையில் நகரமன்ற தலைவராக மத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.



அதிமுக 5 வார்டுகளில்மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் வேண்டுகோளை ஏற்று பல லட்சம் மதிப்பில் தரைமட்டபாலம் அமைத்து கொடுத்தஉடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து நன்றி என 32 வது வார்டு அதிமுக எம்ஜிஆர் மன்றம் ருத்ரப்பநகர் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.



இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறாக ஒரு திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பேனர் வைப்பார்களா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உடுமலையில் திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பாராட்டும் விதமாக பேனர் வைக்கப்பட்ட சம்பவம் உடுமலையில் அதிமுகவினரிடையேபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...