உடுமலையில் திமுக நகர்மன்றத் தலைவரை பாராட்டி பேனர் வைத்த அதிமுகவினர்! - வைரலாகும் வீடியோ

உடுமலை நகராட்சியில் திமுக நகர மன்ற தலைவராக இருக்கும் மத்தீன், 32வது வார்டில் பல லட்சம் மதிப்பில் தரைமட்ட பாலம் அமைத்து கொடுத்தற்காக நன்றி கூறி பாராட்டி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நகரமன்றத் தேர்தலில் 18 வார்டுகளை திமுக கைப்பற்றிய நிலையில் நகரமன்ற தலைவராக மத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.



அதிமுக 5 வார்டுகளில்மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் வேண்டுகோளை ஏற்று பல லட்சம் மதிப்பில் தரைமட்டபாலம் அமைத்து கொடுத்தஉடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து நன்றி என 32 வது வார்டு அதிமுக எம்ஜிஆர் மன்றம் ருத்ரப்பநகர் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.



இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறாக ஒரு திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பேனர் வைப்பார்களா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உடுமலையில் திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பாராட்டும் விதமாக பேனர் வைக்கப்பட்ட சம்பவம் உடுமலையில் அதிமுகவினரிடையேபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...