கோவையில் விலாசம் கேட்பது போல் நகைபறிப்பு - மடக்கி பிடித்த பொதுமக்கள்!

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த குஷ்பூ என்பவர் கணவருடன் கடைக்கு சென்று திரும்பிய போது விலாசம் கேட்பது போல், அவரின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்துச் செல்ல முயன்ற சித்தாபுதூரை சேர்ந்த ஜெகநாதன் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு அருகே விலாசம் கேட்பது போல் தாலி சங்கிலியை பறித்துச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வெள்ளகிணறு பகுதியை சேர்ந்தவர் குஷ்பூ. இவர் நேற்றிரவு இரவு தனது கணவர் ஆனந்தவேலுடன் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு இருவரும், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, இவர்களை மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் வீட்டின் அருகே வந்த போது, பின்னால் வந்த நபர்கள் வாகனத்தில் இருந்தபடியே, குஷ்பூவிடம் விலாசம் கேட்டுள்ளனர்.

குஷ்பூ அதற்கு பதிலளிக்க துவங்கிய நிலையில் குஷ்பூவின் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர். இந்நிலையில், உடனடியாக ஆனந்தவேல் சத்தமிட்டதை தொடர்ந்து அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்தினர்.

அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(28) என்பதும், கூலித்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் வாகனத்தில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...