கோவையில் விலாசம் கேட்பது போல் நகைபறிப்பு - மடக்கி பிடித்த பொதுமக்கள்!

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த குஷ்பூ என்பவர் கணவருடன் கடைக்கு சென்று திரும்பிய போது விலாசம் கேட்பது போல், அவரின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்துச் செல்ல முயன்ற சித்தாபுதூரை சேர்ந்த ஜெகநாதன் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு அருகே விலாசம் கேட்பது போல் தாலி சங்கிலியை பறித்துச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வெள்ளகிணறு பகுதியை சேர்ந்தவர் குஷ்பூ. இவர் நேற்றிரவு இரவு தனது கணவர் ஆனந்தவேலுடன் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு இருவரும், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, இவர்களை மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் வீட்டின் அருகே வந்த போது, பின்னால் வந்த நபர்கள் வாகனத்தில் இருந்தபடியே, குஷ்பூவிடம் விலாசம் கேட்டுள்ளனர்.

குஷ்பூ அதற்கு பதிலளிக்க துவங்கிய நிலையில் குஷ்பூவின் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர். இந்நிலையில், உடனடியாக ஆனந்தவேல் சத்தமிட்டதை தொடர்ந்து அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்தினர்.

அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இருந்த நகைகள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(28) என்பதும், கூலித்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் வாகனத்தில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...