சூலூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதல் -டிரைவர் பலி

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் சசிகுமார்(48). ஆட்டோ டிரைவரான இவர் நண்பரான இளம்வழுதியுடன் ஆட்டோவில் குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, லாரி மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பலியாகினார்.


கோவை: குளத்துப்பாளையம் பிரிவு அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கேரள மாநில வாலிபர் பலியாகினார்.

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (48). ஆட்டோ டிரைவரான சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த இளம்வழுதி (52) என்பவருடன் கேரளா நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.

குளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி ஆட்டோவின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோவுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இளம்வழுதியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...