கோவை அருகே பைக் மீது மான் மோதல் - வாலிபர் உயிரிழப்பு

கோவை: கணுவாய்பாளையம் அருகே பைக் மீது மான் மோதியதில்,பைக் கட்டுபாட்டை இழந்து மரத்தின்மீது மோதியதால், சமயபுரத்தைச் சேர்ந்த மிதுன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சந்துரு, நிதின்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.


கோவை: காணுவாய்பாளையம் அருகே பைக் மீது மான் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் காரமடை தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தை சேர்ந்தவர் மிதுன் (20). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான சந்துரு, நிதின்குமார் ஆகிய பைக்கில் சென்றார். பைக்கை சந்துரு ஓட்டி சென்றார்.

பைக் கணுவாய்பாளையம் - பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் சென்ற போது திடீரென பைக் மீது மான் மோதியது. மான் மோதிய வேகத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மிதுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துரு, நிதின்குமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...