கோவை அருகே பைக் மீது மான் மோதல் - வாலிபர் உயிரிழப்பு

கோவை: கணுவாய்பாளையம் அருகே பைக் மீது மான் மோதியதில்,பைக் கட்டுபாட்டை இழந்து மரத்தின்மீது மோதியதால், சமயபுரத்தைச் சேர்ந்த மிதுன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சந்துரு, நிதின்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.


கோவை: காணுவாய்பாளையம் அருகே பைக் மீது மான் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் காரமடை தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தை சேர்ந்தவர் மிதுன் (20). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான சந்துரு, நிதின்குமார் ஆகிய பைக்கில் சென்றார். பைக்கை சந்துரு ஓட்டி சென்றார்.

பைக் கணுவாய்பாளையம் - பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் சென்ற போது திடீரென பைக் மீது மான் மோதியது. மான் மோதிய வேகத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மிதுன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சந்துரு, நிதின்குமார் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...