வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை - வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு

வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு செய்தார். வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் 450-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.



இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் இன்று சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர், ஜே ஜே நகர், சோலையார் அணை இடதுகரை, வலதுகரை காவல் நிலையம் உட்பட்ட அனைத்து பகுதிகளும் பட்டா வழங்குவதற்கு பெயர் மற்றும் விலாசங்களை ஆய்வு செய்தார்.



மேலும் சோலையார் அணை பகுதியில் பராமரிக்கப்பட்டுள்ள அணையின் மீன் வளர்ப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வு பணியின் போது வால்பாறை வட்டாச்சியர் ஜோதிபாசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...