மகளிர் உதவித்தொகையை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் தான்..! - மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி பெருமிதம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்மொழிந்த மெட்ரோ, சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா மற்றும் மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆகிய திட்டங்களை தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை வரவேற்கிறோம் என மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.


கோவை: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி தான் என அக்கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023 குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி சிம்ப்ளிசிட்டியிடம் பேசியதாவது,

எங்கள் தலைவர் கமல்ஹாசன் கூறியது போல், மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம் தான். பெண்கள் அதிகாரம் மற்றும் மேம்பாடு என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும் தமிழக அரசு மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண் குடும்பத் தலைவர்களுக்கு நாங்கள் 3000 ரூபாய் தருவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மெட்ரோ திட்டம், டெக் சிட்டி, காந்திபுரத்தில் உள்ள சிறை வளாகத்திற்கு பதிலாக செம்மொழி பூங்கா போன்றவை கோவைக்கு நல்ல வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்கள்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான சாலைகளால் மக்கள் போராடி வரும் நிலையில், கோவையில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மெட்ரோ திட்டமும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பட்ஜெட்டில் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் நல்ல கலவையாக உள்ளது.

அதேநேரம் வருவாய் பற்றாக்குறையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சொல்லப்பட்ட காலக்கெடுவிற்குள் தமிழக அரசு பற்றாக்குறையை சரி செய்யும் என நம்புகிறோம். கோயம்புத்தூர் நகரத்தில் உள்ள அனைத்து கல்வித் தரத்துடன் பெரிதும் பயன்பெறும் ஒன்று என்றால் அது டெக் சிட்டி திட்டம் தான். அதுகுறித்த விவரங்களை அறிய காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...