மகளிர் உதவித்தொகையை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் தான்..! - மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி பெருமிதம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்மொழிந்த மெட்ரோ, சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா மற்றும் மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆகிய திட்டங்களை தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை வரவேற்கிறோம் என மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.


கோவை: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை முதலில் முன்மொழிந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி தான் என அக்கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023 குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் அனுஷா ரவி சிம்ப்ளிசிட்டியிடம் பேசியதாவது,

எங்கள் தலைவர் கமல்ஹாசன் கூறியது போல், மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை அரசியல் களத்திற்கு கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம் தான். பெண்கள் அதிகாரம் மற்றும் மேம்பாடு என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும் தமிழக அரசு மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண் குடும்பத் தலைவர்களுக்கு நாங்கள் 3000 ரூபாய் தருவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மெட்ரோ திட்டம், டெக் சிட்டி, காந்திபுரத்தில் உள்ள சிறை வளாகத்திற்கு பதிலாக செம்மொழி பூங்கா போன்றவை கோவைக்கு நல்ல வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்கள்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான சாலைகளால் மக்கள் போராடி வரும் நிலையில், கோவையில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மெட்ரோ திட்டமும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பட்ஜெட்டில் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் நல்ல கலவையாக உள்ளது.

அதேநேரம் வருவாய் பற்றாக்குறையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சொல்லப்பட்ட காலக்கெடுவிற்குள் தமிழக அரசு பற்றாக்குறையை சரி செய்யும் என நம்புகிறோம். கோயம்புத்தூர் நகரத்தில் உள்ள அனைத்து கல்வித் தரத்துடன் பெரிதும் பயன்பெறும் ஒன்று என்றால் அது டெக் சிட்டி திட்டம் தான். அதுகுறித்த விவரங்களை அறிய காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...