கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), சனீப் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: செல்வபுரம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள பொது கழிப்பறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் திடீரென ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது அவர்கள் டைப்போல், நிட்ராஷிபாம் என போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் பிடிபட்ட இருவரும் கோவை கரும்புக்கடையை சேர்ந்த நவாஷ் (29), உக்கடம் பகுதியை சேர்ந்த சனீப் (30) என்பதும் இவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 190 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...