பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்து பொதுமக்கள் மகாலிங்கபுரம் குடிநீர் வடிகால்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் குடிநீரின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றியிட்டு மனு அளிக்க வந்தனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்தும் குடிநீர் 20 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால் குடிநீர் இன்றி மாக்கினாம்பட்டி ஊராட்சியில் உள்ள வைகை நகர், பாலாஜி நகர், கந்தசாமிபுரம் போன்ற பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், தற்போது அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், சின்னாபாளையம் ஊராட்சியிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...