சாதி சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் குரும்பா சங்கத்தினர் மனு!

குரும்பா சமூக மக்கள் கல்வி, வேலைவாய்ப்பை பெற குரும்பா என்ற சாதி சான்று வழங்க வேண்டும் எனவும், ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைக்கவும், தங்கள் சமுதாய மக்கள் அரசியல் அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட குரும்பா சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தங்கள் சமுதாய மக்களின் வேலைவாய்ப்பு பெற, கல்வி பெற, தங்கள் சமுதாய மக்களுக்கு குருமன்ஸ் என்ற பழங்குடியின சாதிசான்று வழங்க வேண்டும்.



தங்கள் குலத்தொழிலான ஆடு வளர்த்தல் தொழில் மேம்பட தமிழ்நாடு அரசு ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை தங்கள் சமுதாய மக்களுக்கே கொடுக்க வேண்டும்.

இயற்கை, மற்றும் விபத்து போன்ற காரணங்களால் ஆடுகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதால், தேவையான காப்பீடு மற்றும் ஆடு வளர்க்கும் தொழிலை காப்பாற்ற தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தர வேண்டும்.

அரசியல் அங்கீகாரம் பெற எங்கள் இனத்திற்குரிய பிரதிநிதித்துவம் பெற இட ஒதுக்கீட்டில் தங்கள் குரும்ப இனத்திற்கும் உள் ஒதுக்கீடு வழங்கி அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு இச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...