தமிழக பட்ஜெட் - கொடிசியா அமைப்பு வரவேற்பு

தமிழக அரசின்‌ நிதிநிலை அறிக்கை 2023 - 2024யில்‌ சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு பயனளிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ள அறிவிப்புகளை கொடிசியா வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை கொடிசியா அமைப்பு வரவேற்றுள்ளது.

அறிவிப்புகள் பின்வருமாறு:

* தொழில்‌ துறைக்கு 3,268 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு.

* 2,877 கோடி ரூபாய்‌ செலவில்‌ 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன்‌ மையங்களாக மாற்றும்‌ திட்டம்‌.

* 711 தொழிற்சாலைகளிலுள்ள 6.35 இலட்சம்‌ தொழிலாளர்களுக்கு மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ விரிவுபடுத்துவது. உயர்‌ இரத்த அழுத்தம்‌, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம்‌ அளித்து இந்த மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்படும்‌. இத்திட்டத்தில்‌ புலம்பெயர்‌ தொழிலாளர்களும்‌ பயனடைவார்கள்‌.

* இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட, தொழில்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்கப்படும்‌. தொழிற்சாலைகளில்‌ திறன்‌ பள்ளிகள்‌ (Factory Skill 56௦௦18) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில்‌ 25 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது.

* ரூபாய்‌ 77,000 கோடியில்‌ புதிய மின்‌ உற்பத்தி திட்டம்‌.

* தகவல்‌ தொழில்நுட்ப புரட்சியின்‌ இரண்டாம்‌ கட்டமாக சென்னை, கோவை மற்றும்‌ ஓசூர்‌ நகரங்களில்‌ டெக் சிட்டி அமைக்கப்படும்‌.

* கோயம்புத்தூர்‌ மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ ஒரு செவிலியர்‌ கல்லூரி மற்றும்‌ விடுதியுடன்‌ கூடிய புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியின்‌ கட்டுமானம்‌.

* கட்டிட வரைபடங்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ அனுமதி பெற நடவடிக்கை.

* கோயம்புத்தூரில்‌ மெட்ரோ ரயில்‌ சேவைகளுக்கு ரூபாய்‌ 9,000 கோடி.

இதை தவிர கொடிசியா சிறுதொழில்‌ வளர்ச்சிக்காக கீழ்க்கண்டவற்றையும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ எதிர்பார்த்திருந்தது.

1. உயர்ந்து வரும்‌ மூலப்பொருள்‌ விலை குறித்த தீர்வு.

2. அனைத்து சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு 6% வட்டி மானியம்‌ என்பதை நீட்டித்தல்‌.

3. எலக்ட்ரானிக்‌ பொருட்கள்‌ உற்பத்திக்கென சிறப்பு பொருளாதார மண்டலம்‌.

இவற்றையும்‌ மாநில அரசு கவனித்து, சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தீர்வுகாணும்‌ என நம்புகின்றோம்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...