தமிழக பட்ஜெட் - கொடிசியா அமைப்பு வரவேற்பு

தமிழக அரசின்‌ நிதிநிலை அறிக்கை 2023 - 2024யில்‌ சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு பயனளிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ள அறிவிப்புகளை கொடிசியா வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை கொடிசியா அமைப்பு வரவேற்றுள்ளது.

அறிவிப்புகள் பின்வருமாறு:

* தொழில்‌ துறைக்கு 3,268 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு.

* 2,877 கோடி ரூபாய்‌ செலவில்‌ 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன்‌ மையங்களாக மாற்றும்‌ திட்டம்‌.

* 711 தொழிற்சாலைகளிலுள்ள 6.35 இலட்சம்‌ தொழிலாளர்களுக்கு மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ விரிவுபடுத்துவது. உயர்‌ இரத்த அழுத்தம்‌, நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம்‌ அளித்து இந்த மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்படும்‌. இத்திட்டத்தில்‌ புலம்பெயர்‌ தொழிலாளர்களும்‌ பயனடைவார்கள்‌.

* இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட, தொழில்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்கப்படும்‌. தொழிற்சாலைகளில்‌ திறன்‌ பள்ளிகள்‌ (Factory Skill 56௦௦18) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில்‌ 25 கோடி ரூபாய்‌ வழங்கப்பட்டுள்ளது.

* ரூபாய்‌ 77,000 கோடியில்‌ புதிய மின்‌ உற்பத்தி திட்டம்‌.

* தகவல்‌ தொழில்நுட்ப புரட்சியின்‌ இரண்டாம்‌ கட்டமாக சென்னை, கோவை மற்றும்‌ ஓசூர்‌ நகரங்களில்‌ டெக் சிட்டி அமைக்கப்படும்‌.

* கோயம்புத்தூர்‌ மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ ஒரு செவிலியர்‌ கல்லூரி மற்றும்‌ விடுதியுடன்‌ கூடிய புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியின்‌ கட்டுமானம்‌.

* கட்டிட வரைபடங்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ அனுமதி பெற நடவடிக்கை.

* கோயம்புத்தூரில்‌ மெட்ரோ ரயில்‌ சேவைகளுக்கு ரூபாய்‌ 9,000 கோடி.

இதை தவிர கொடிசியா சிறுதொழில்‌ வளர்ச்சிக்காக கீழ்க்கண்டவற்றையும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ எதிர்பார்த்திருந்தது.

1. உயர்ந்து வரும்‌ மூலப்பொருள்‌ விலை குறித்த தீர்வு.

2. அனைத்து சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு 6% வட்டி மானியம்‌ என்பதை நீட்டித்தல்‌.

3. எலக்ட்ரானிக்‌ பொருட்கள்‌ உற்பத்திக்கென சிறப்பு பொருளாதார மண்டலம்‌.

இவற்றையும்‌ மாநில அரசு கவனித்து, சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தீர்வுகாணும்‌ என நம்புகின்றோம்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...