இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார்..! - கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

உலகில் மக்கள் பசியால் வாடும் நிகழ்வு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார். கொண்டு வரப்படும் திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனுக்குமானதாக உள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுவதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.



கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி.20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி.20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது.



இந்த மாநாட்டைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.



இந்த மாநாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களுக்கான கூட்டுக் கல்வி முறை என்ற தலைப்பிலும், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் இளம் தூதுவர்கள் கலந்துரையாடுகின்றனர்.



இந்த மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், கால நிலை, உணவு, சுகாதாரம், வறுமை, கல்வி மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க உள்ளனர். இந்தியாவில் இந்த சவால்களைப் பிரதமர் திறமையாக எதிர்கொண்டு வருகிறார். கொரோனா பரவலால் உலகமே பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இந்தியா தடுப்பூசியைத் தயாரித்து நம் மக்களுக்கு வழங்கியதோடு, உலக நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் இ-வித்யா என்கிற திட்டம் மூலமாக நாடு முழுவதற்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றுவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. தாய் மொழி கல்வியை ஆரம்பக் கல்வியில் கொடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது, என்றார்.



இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

நாம் அனைவரும் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இலக்கியங்களிலும் பல ஆயிரம் ஆண்டுகளாகத் திகழ்ந்து விளங்கும் மாநிலத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ்க் கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குறிப்பாகத் திருவள்ளுவரின் திருக்குறள் என்பது மக்களுக்கு, பல்வேறு கலாச்சாரங்களை கற்றுக் கொடுக்கிறது. அதேபோல் சிலப்பதிகாரம், மணிமேகலை தொல்காப்பியம், புறநானூறு போல இலக்கியங்களும் நமது கலாச்சாரங்களை எடுத்துக்கூறுகிறது.

இயற்கை மனித மோதல் நடந்துவருகிறது. இதனால் பூமி வெப்ப மயமாகி வருகிறது. நதிகள் வறண்டு, வனங்கள் காய்ந்து என பல்வேறு மோதல்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர் நடந்து வருகிறது. பல நாடுகள் உலகை அழிக்கும் வகையிலான ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. புதிய புதிய எலக்ட்ரானிக் உபகரணங்களால் மனிதர்கள் தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.

குறிப்பாக மன உளைச்சல் அதிகளவில் காணப்படுகிறது. நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் எப்போது அமைதியான ஆரோக்கியமான உலகை உருவாக்க வேண்டும் என்பதே. விஞ்ஞானிகளுக்கும் விவசாயிகளுக்கும் நன்றி உணவு, மற்றும் புதிய கண்டுபிடித்தமைக்கு. கொரோனா காலத்தில் தடுப்பூசிக்காக உலக நாடுகள் திண்டாடி வந்த நிலையில், இந்தியா தடுப்பூசிகளைத் தயாரித்து அதனை உலக நாடுகளுக்கும் இலவசமாகக் கொடுத்தது.

நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் நமது மரபணுவிலேயே உள்ளது. அதுதான் இந்தியா, அதுவே நமது எண்ணம். வாசுதேவ் குடும்பம் என்பது அரசியலுக்காக அல்ல. தமிழில் கூறப்பட்டுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ளது. இந்தியாவில் இன்னும் சில இடங்களில் வறுமை உள்ளது.

உலகில் மக்கள் பசியால் வாடும் நிகழ்வு நடந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவை ஒரு குடும்பம் போல பிரதமர் பார்க்கிறார். கொண்டுவரப்படும் திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனுக்குமானதாக உள்ளது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுவதில்லை. இளம் தலைவர்களான நீங்கள் இந்த மாநாட்டில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது நிச்சயம் உலகின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா, நடிகை கவுதமி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...