கோவை அருகே ரூ.73 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை!

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமையில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை பன்னிமடை ஊராட்சி கணுவாய் பகுதியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் நிதியில் ரூ.18 லட்சத்தி 60ஆயிரம் மதிப்பில் கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே கலையரங்கம் அமைத்தல், ஊராட்சி பொதுநிதியில் ரூ.27 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 10வது வார்டில் வடிகால் பணிகள் அமைத்தல்



11 மற்றும் 12வது வார்டுகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் வடிகால் மற்றும் சாலை பணிகள், 13வது வார்டில் ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் சாலைபணிகள் மற்றும் கே.என்.ஜி.புதூர் 15வது வார்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



ஊராட்சி தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமை தாங்கினார். ஊராட்சித் துணைத்தலைவர் அருள்குமார், ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பன்னிமடை வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ராமச்சந்திரன், கவிதா, கோபால்சாமி, மாரித்தாய், விஜயலட்சுமி, சிவக்குமார், லதா, ஜெயமணி, சாந்தி, முருகேஷ், வாசுமணி, கணுவாய் ஊர் முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...