கோவை அருகே ரூ.73 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை!

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமையில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை பன்னிமடை ஊராட்சி கணுவாய் பகுதியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் நிதியில் ரூ.18 லட்சத்தி 60ஆயிரம் மதிப்பில் கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே கலையரங்கம் அமைத்தல், ஊராட்சி பொதுநிதியில் ரூ.27 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 10வது வார்டில் வடிகால் பணிகள் அமைத்தல்



11 மற்றும் 12வது வார்டுகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் வடிகால் மற்றும் சாலை பணிகள், 13வது வார்டில் ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் சாலைபணிகள் மற்றும் கே.என்.ஜி.புதூர் 15வது வார்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



ஊராட்சி தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமை தாங்கினார். ஊராட்சித் துணைத்தலைவர் அருள்குமார், ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பன்னிமடை வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ராமச்சந்திரன், கவிதா, கோபால்சாமி, மாரித்தாய், விஜயலட்சுமி, சிவக்குமார், லதா, ஜெயமணி, சாந்தி, முருகேஷ், வாசுமணி, கணுவாய் ஊர் முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...