கோவை அருகே ரூ.73 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை!

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமையில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாயில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.

கோவை பன்னிமடை ஊராட்சி கணுவாய் பகுதியில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் நிதியில் ரூ.18 லட்சத்தி 60ஆயிரம் மதிப்பில் கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே கலையரங்கம் அமைத்தல், ஊராட்சி பொதுநிதியில் ரூ.27 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் 10வது வார்டில் வடிகால் பணிகள் அமைத்தல்



11 மற்றும் 12வது வார்டுகளில் ரூ.7 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் வடிகால் மற்றும் சாலை பணிகள், 13வது வார்டில் ரூ.14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் சாலைபணிகள் மற்றும் கே.என்.ஜி.புதூர் 15வது வார்டில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



ஊராட்சி தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைமை தாங்கினார். ஊராட்சித் துணைத்தலைவர் அருள்குமார், ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பன்னிமடை வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ராமச்சந்திரன், கவிதா, கோபால்சாமி, மாரித்தாய், விஜயலட்சுமி, சிவக்குமார், லதா, ஜெயமணி, சாந்தி, முருகேஷ், வாசுமணி, கணுவாய் ஊர் முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...