திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமையவுள்ள, புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2கோடி நிதியுதவி வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என்றார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ரூ.90கோடியில் இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ கருவிகளுடன் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கும் விழா இன்று பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ECGC நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்நாதன், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சங்கத் தலைவர் சக்திவேல் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் முருகேசன் வழங்கினர்.



இந்நிகழ்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை விட அதிநவீன கருவிகளுடன் திருப்பூரில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறித்து இப்போது சொன்னால் பட்ஜெட் ரகசியம் வெளியாகிவிடும் எனவே நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...