திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமையவுள்ள, புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2கோடி நிதியுதவி வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என்றார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ரூ.90கோடியில் இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ கருவிகளுடன் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்கும் விழா இன்று பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ECGC நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்நாதன், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சங்கத் தலைவர் சக்திவேல் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் முருகேசன் வழங்கினர்.



இந்நிகழ்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை விட அதிநவீன கருவிகளுடன் திருப்பூரில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறித்து இப்போது சொன்னால் பட்ஜெட் ரகசியம் வெளியாகிவிடும் எனவே நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...