ஆனைக்கட்டியில் பழங்குடி மக்கள் இசைக்கு நடனமாடிய வடமாநில பழங்குடி மாணவர்கள்!

கோவை பாரதியார் பல்கலை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்ட வடமாநில பழங்குடியின மாணவர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.


கோவை: ஆனைக்கட்டி அடுத்த கொண்டனூரில் அரசாங்க பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடமாநில பழங்குடியின மாணவர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடினர்.

இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், வடமாநில பழங்குடி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், கோவையில் நடைபெறும் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் நலப்பணித் திட்டம் சார்பில், ‘பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாம்' நடந்தது.



இம்முகாமில் பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 220 பேர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ஆனைக்கட்டி கொண்டனூரில் அரசாங்க பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்றனர்.



அப்போது வடமாநில பழங்குடியின மாணவர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆனைக்கட்டி பழங்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.



பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்வியல் சூழலை பிற மாநில பழங்குடி மாணவர்களும் அறிந்துக் கொண்டனர். இதை தொடர்ந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பழங்குடியின மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடனமாடி அசத்தினர். இதில் பழங்குடிகள் இசை ஆரம்பித்தவுடன்,வடமாநில பழங்குடி மாணவர்கள் உற்சாகமாக நடனமாடினர்.

தமிழ் பழங்குடியின மக்கள், வடமாநில பழங்குடியின மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நடனமாடியது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...