கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க ஆலோசனை கூட்டம்

கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் குரும்பர் இன மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



கோவை: குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற உள்ள குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலை. ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குரும்பர்‌ இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைப்பது, அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது, கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ள குரும்பர் இன மக்களுக்கு அரசியல் மற்றும் அதிகார பிரதிநிதித்துவம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

குரும்பர் இன மக்களை அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தால் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க கூடிய சூழல் உருவாகும். குரும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவதற்கான முன்னெடுப்பைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...