உடுமலை அருகே பச்சை மிளகாய் சாகுபடியில் நல்ல விளைச்சல் - விவசாயிகள் மகிழ்ச்சி!

உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மிளகாய் சாகுபடி செய்வதால் எல்லா காலங்களிலும் நல்ல லாபம் ஈட்டமுடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி.



திருப்பூர்: உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் மிளகாய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிளகாய் சாகுபடி செய்வதால் எல்லா காலங்களிலும் நல்ல லாபம் ஈட்டமுடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது, தென்னை நீண்ட காலப்பயிர் என்பதால் விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மூலம் சொட்டுநீர் பாசன முறையில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை மிளகாய் பொதுவாக அன்றாட உணவுகளில் அதிகளவு பயன்படுத்தக் கூடியது. சைவம், அசைவம் என இரண்டு உணவுகளில் பச்சை மிளகாய்க்குத் தேவை உள்ளது.

ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு 400 கிராம் விதை தேவைப்படுகிறது. நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்குப் பிறகு பிடுங்கி நடவு செய்யலாம் அல்லது நாற்று வாங்கி நடவு செய்யலாம். நாற்றுக்கள் நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து நடவு செய்வது அவசியம்.



பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலிருந்து அறுவடை செய்யலாம். மேலும் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்களுக்குப் பச்சை மிளகாய் அறுவடை செய்யப்படும். முதல் இரண்டு பறிப்புகளில் பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.

ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8 டன் வரை மகசூல் கொடுக்கும். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மிளகாய் உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...