அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு ஏலம் போன மக்காச்சோளம்!

திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த 19000 கிலோ அளவிலான மக்காசோளம், அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட வியாபாரிகளால், ரூ.4.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு மக்கோசோளம் ஏலம் எடுக்கப்பட்டது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான அலங்கியம், தளவாய்பட்டினம், சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில். , மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

திருப்பூர், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவ்வாறு, மொத்தம் 19,000 கிலோ அளவிலான மக்காச்சோளம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனை வாங்க திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர் அப்போது அதிகபட்சமாக குவிண்டால் 2,211 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 2,202 ரூபாய்க்கும் விலை போனது. இந்த நிலையில் இன்று, மொத்தமாக ரூ.4.25 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் அருள் குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...