அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு ஏலம் போன மக்காச்சோளம்!

திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த 19000 கிலோ அளவிலான மக்காசோளம், அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட வியாபாரிகளால், ரூ.4.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு மக்கோசோளம் ஏலம் எடுக்கப்பட்டது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான அலங்கியம், தளவாய்பட்டினம், சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில். , மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

திருப்பூர், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவ்வாறு, மொத்தம் 19,000 கிலோ அளவிலான மக்காச்சோளம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனை வாங்க திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர் அப்போது அதிகபட்சமாக குவிண்டால் 2,211 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 2,202 ரூபாய்க்கும் விலை போனது. இந்த நிலையில் இன்று, மொத்தமாக ரூ.4.25 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் அருள் குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...