வால்பாறையில் கஞ்சா பறிமுதல் - கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள வளையல் கடை அருகே இளைஞர்கள் கஞ்சா உபயோகிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டபோது சேலத்தை சேர்ந்தசஞ்சய் (வயது19), வால்பாறை மாணிக்கா என்.சியை சேர்ந்த பாலாஜி (வயது19) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் என்றும் மற்றொருவர் புதுத்தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 21) வேலைசெய்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...