சொத்துவரியை 50 சதவீதம் குறைக்கக் கோரிக்கை - பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் 50 சதவீதம் சொத்து வரி குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில் சொத்து வரி குறைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை 50% குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், சொத்து வரி 50 சதவீதம் குறைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்படவுள்ளது.

இதன் மூலம் முதல் கட்டமாக வணிக நிறுவனங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரியை குறைக்கவும், குடியிருப்பு கட்டிடங்களுக்கும் சொத்துவரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முதல்வர் பொள்ளாச்சி நகராட்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...