சொத்துவரியை 50 சதவீதம் குறைக்கக் கோரிக்கை - பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் 50 சதவீதம் சொத்து வரி குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில் சொத்து வரி குறைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை 50% குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், சொத்து வரி 50 சதவீதம் குறைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்படவுள்ளது.

இதன் மூலம் முதல் கட்டமாக வணிக நிறுவனங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரியை குறைக்கவும், குடியிருப்பு கட்டிடங்களுக்கும் சொத்துவரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முதல்வர் பொள்ளாச்சி நகராட்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...