சொத்துவரியை 50 சதவீதம் குறைக்கக் கோரிக்கை - பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் 50 சதவீதம் சொத்து வரி குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில் சொத்து வரி குறைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை 50% குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், சொத்து வரி 50 சதவீதம் குறைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்படவுள்ளது.

இதன் மூலம் முதல் கட்டமாக வணிக நிறுவனங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரியை குறைக்கவும், குடியிருப்பு கட்டிடங்களுக்கும் சொத்துவரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முதல்வர் பொள்ளாச்சி நகராட்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...