பெருந்துறையில் அதிக வட்டி தருவதாக மோசடி - கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த 4 பேருக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுசி லேண்டு புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம், கடந்த 2012ல் முதலீட்டாளர்களிடம் அதிக வட்டியுடன் பணத்தை கொடுப்பதாக கூறி ரூ.87.33 லட்சம் மோசடி செய்ததாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எம்.எஸ்.குரு, அமுதன், பார்த்திபன், சுரேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4 பேரும் குற்றவாளிகள் என்றும், தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.81.90 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...