பல்லடம் அரசுக்கலை கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்றம் தொடக்கம்

போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருள் தடுப்பு மன்றம் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, சமூக ஆர்வலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருள் தடுப்பு மன்றத்தினை காவல் ஆய்வாளர்கள் துவக்கி வைத்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே காவல் ஆய்வாளர் பர்வீன் பானு பேசுகையில், அனைத்து குற்றச் சம்பங்களுக்கும் முதல் காரணமாக அமைவது போதைப் பொருட்கள் தான், வலிமையான இளைய தலைமுறையை உருவாக்க போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் தள்ளி இருக்க வேண்டும், கஞ்சா, மது போன்ற போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.



இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...