பல்லடம் அரசுக்கலை கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்றம் தொடக்கம்

போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருள் தடுப்பு மன்றம் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, சமூக ஆர்வலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருள் தடுப்பு மன்றத்தினை காவல் ஆய்வாளர்கள் துவக்கி வைத்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே காவல் ஆய்வாளர் பர்வீன் பானு பேசுகையில், அனைத்து குற்றச் சம்பங்களுக்கும் முதல் காரணமாக அமைவது போதைப் பொருட்கள் தான், வலிமையான இளைய தலைமுறையை உருவாக்க போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் தள்ளி இருக்க வேண்டும், கஞ்சா, மது போன்ற போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.



இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...