கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - கோவை ரயில் நிலையத்தில் 3 பெண்கள் கைது!

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி மற்றும் மேரி எனும் மூவரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சிலர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதை அடுத்து, கோவை ரயில் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர்.

அப்பொழுது 3 பெண்கள் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்து, காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மூன்று பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி, போத்தனூரைச் சேர்ந்த மேரி என்பது தெரியவந்தது.

இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று மூன்று பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...