கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - கோவை ரயில் நிலையத்தில் 3 பெண்கள் கைது!

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி மற்றும் மேரி எனும் மூவரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சிலர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதை அடுத்து, கோவை ரயில் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர்.

அப்பொழுது 3 பெண்கள் 500 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்து, காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மூன்று பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரி, ராஜலட்சுமி, போத்தனூரைச் சேர்ந்த மேரி என்பது தெரியவந்தது.

இவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்று மூன்று பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...