கோவையில் கல்லூரி மாணவிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

தமிழகத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தனியார் கல்லூரி மாணவிகள் சென்னை வரை மேற்கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கோவையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.



கோவை: தமிழகத்தில் பசுமை பரப்பளவு அடர்த்தி குறைவாக உள்ளது என்ற புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து மரங்களை வளர்க்க வேண்டும், சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை இரு சக்கர வாகனத்தில் செல்லும் விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியை, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இன்று துவங்கிய பேரணி நாளை இரவு சென்னையில் நிறைவடைய உள்ளது. செல்லும் வழியில் உள்ள காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிகளையும் சந்தித்து விழிப்புணர்வு குறித்து தெரிவித்து செல்கின்றனர்.



இதேபோல கிராமங்களில் மரங்கள் வளர்ப்பு குறித்தும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...