கோவையில் கல்லூரி மாணவிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

தமிழகத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தனியார் கல்லூரி மாணவிகள் சென்னை வரை மேற்கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கோவையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.



கோவை: தமிழகத்தில் பசுமை பரப்பளவு அடர்த்தி குறைவாக உள்ளது என்ற புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து மரங்களை வளர்க்க வேண்டும், சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை இரு சக்கர வாகனத்தில் செல்லும் விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியை, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இன்று துவங்கிய பேரணி நாளை இரவு சென்னையில் நிறைவடைய உள்ளது. செல்லும் வழியில் உள்ள காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிகளையும் சந்தித்து விழிப்புணர்வு குறித்து தெரிவித்து செல்கின்றனர்.



இதேபோல கிராமங்களில் மரங்கள் வளர்ப்பு குறித்தும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...