கோவையில் கல்லூரி மாணவிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

தமிழகத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தனியார் கல்லூரி மாணவிகள் சென்னை வரை மேற்கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கோவையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.



கோவை: தமிழகத்தில் பசுமை பரப்பளவு அடர்த்தி குறைவாக உள்ளது என்ற புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து மரங்களை வளர்க்க வேண்டும், சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை இரு சக்கர வாகனத்தில் செல்லும் விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியை, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இன்று துவங்கிய பேரணி நாளை இரவு சென்னையில் நிறைவடைய உள்ளது. செல்லும் வழியில் உள்ள காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிகளையும் சந்தித்து விழிப்புணர்வு குறித்து தெரிவித்து செல்கின்றனர்.



இதேபோல கிராமங்களில் மரங்கள் வளர்ப்பு குறித்தும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...