தாராபுரத்தில் பாஜக சார்பில் பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்!

திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில், தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பூத் கமிட்டிகளை நிர்வகிப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாஜக சார்பில், பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான மாவட்ட சக்தி கேந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில், பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான மாவட்ட சக்தி கேந்திர பயிற்சி முகாம் தாராபுரத்தில் இன்று நடைபெற்றது.



தாராபுரம் - உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.



தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ் மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த பாஜக பொறுப்பாளர்கள், முன்னாள் சக்தி கேந்திர மற்றும் நகர நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், பாஜக தரவு மேலாண்மை பிரிவு தலைவர் ரமேஷ் குமார் கலந்து கொண்டு பேசியதாவது, ஒவ்வொரு பூத் கமிட்டியின் தலைவர்களுக்கும் நான்கு முதல் ஆறு பூத்களை நிர்வாகிக்க உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என தெரிவித்தார்.



தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி பேசியதாவது, சக்தி கேந்திர மூலம் அமைக்கப்பட்டு உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி உறுதி செய்யப்படும். திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் மட்டும் 1174 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.



இதனை கவனத்தில் கொண்டு பாஜக நிர்வாகிகளும் சக்தி கேந்திர நிர்வாகிகளும் செயல்பட வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள பூத்துகளில் எத்தனை வார்டுகள் உள்ளதோ அங்கு வசிக்கும் பாஜக ஆதரவாளர்கள் எந்த கட்சியும் சாராத நடுநிலையாளர்கள் உள்ளிட்டவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியம், நகர தலைவர் விநாயகா சதீஷ், மாவட்ட செயலாளர்கள் மைக்ரோ சுரேஷ் கருப்புசாமி, கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், மாவட்ட துணை தலைவர்கள் கோவிந்தசாமி, விஜயசுந்திரன் பெரியசாமி, கல்பனா, செந்தில், வடிவேல், செல்வா, பழனிச்சாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவர் டாக்டர் கார்த்திகா, மாவட்ட பொது செயலாளர் ஞானசௌந்தரி உட்பட மாநில மாவட்ட நகர பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...